Thursday, July 16, 2009

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!
'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . . .
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!
(நண்பன் மின்னஞ்சலில் அனுப்பியது)

Monday, May 25, 2009

சின்ன நட்பு மட்டுமே!!

நீயும் என் அருகில் இல்லை..

நானும் உன் அருகில் இல்லை....


நீயும்

என்னை பார்த்ததில்லை..

நானும்

உன்னை பார்த்ததில்லை..

நீயும்

என்னிடம் எதையும்

பகிர்ந்ததில்லை..

நானும்

உன்னிடம் எதையும்

பகிர்ந்ததில்லை...


நீயும்

என் சந்தோஷங்களை

கண்டதில்லை..

நானும்

உன் சந்தோஷங்களை

கொண்டாடியதில்லை...


நீயும்

என் வருத்தங்களில்

என் கைகளை பிடித்து கொண்டதில்லை..

நானும்

உன் வருத்தங்களில்

உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...


நம்மிடம்

இருப்பதெல்லாம்

நாம்

என்று நம்மை

சொல்லவைக்கும்

ஒரு சின்ன நட்பு மட்டுமே..


அது

நான் சந்தோஷமாக

இருக்கவேண்டுமென்று உன்னையும்,

நீ சந்தோஷமாக

இருக்கவேண்டுமென்று என்னையும்,

நினைத்துக்கொள்ள செய்கிறது!!!

Friday, May 15, 2009

நண்பர்கள் எதுக்கு அவசியம் !!


Wednesday, May 13, 2009

தல தலதான் !!


வரிசையில் நின்று ஓட்டு போட்ட தல.
(நம்ம பெயர ஓட்டு லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்க)

Friday, May 8, 2009

உருக வைத்த கடைசி வார்த்தை :(

என்னை பார்த்து சிரித்தாள்.,
எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.


எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்.,

என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,

'காதலா?' என்றேன்.,

'இல்லை., அன்பு' என்றாள்.

என்னுடனேயே இருந்தாள்

என் உயிர் போல் ஆனாள்.,

'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

அவள் மணநாள் மேடையில்,

என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.

'அன்பா?' என்றேன்.,

'இல்லை., காதல்' என்றாள்...

Friday, May 1, 2009

அசல் "தல"....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "தல"....


தன்னம்பிக்கை அஜீத் இன் தாய் மொழி…………………….

தன்னம்பிக்கையின் தன்மானம் நீ

தன்னம்பிக்கையின் தாய்மை நீ

தன்னம்பிக்கையின் தன்னம்பிக்கை நீ

Wednesday, April 29, 2009

Old Indian Cartoons (Funny)

Old Indian Cartoons (Funny)




































Monday, April 27, 2009

காதல்


காதல் மிகவும்
ரகசியமானது.
அதனால் தான்
பலரும்
சொல்வதில்லை
காதலியிடம் கூட...... :)

Thursday, April 16, 2009

LOVE LETTER


Tuesday, April 7, 2009

கவிதை


விழிகள் மூடும் போதெல்லாம் பனித்திரைகளாய்உன் நினைவுகள்........


விழிகள் திறக்கும் போதெல்லாம் கானல் நீராய்உன் முகம்..........


ரோஜா பூவின் சுகந்தங்கள்

சில என் நாசியில்

உன்னை நினைக்கும் போதெல்லாம்........


பொழிந்தும் பொழியாமலும்

உன் நினைவுச்சாரல்கள்

எப்பொழுதும் மனதைஈரமாக்கிக் கொண்டு..........


Monday, April 6, 2009

இதயத்தில் சில பூக்கள்


உன் உதடுகளின் திறப்பிற்காக

காத்திருக்கிறது

என் உலகம்...............


உன் விழிகளின் அசைவிற்காக

அசைவின்றி என் மனம்..........


உன் சிரிப்புகளால்

சில துவாணங்கள் என் மனதில்......


உதிர்ந்த உன் சொற்களால்

இதயத்தில் சில பூக்கள்...........

என் முதல் பதிவு



அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் வனக்கம்,

என்ன எழுதுவது என்று தெரியவில்லை, இருந்தாலும் என்னயும் உங்களில் ஒருவனாக ஏற்றுகொள்வீர்கள் என நம்பி எனது முதல் பதிவை துவங்குகிறேன்.
(தமிழில் தவறுகள் இருக்கும் மன்னிக்கவும்)